22 October 2016

வெற்றிகரமான ராஜபாளையம் கிளைமாநாடு

                   ராஜபாளையம் கிளைமாநாடு நேற்று 21.10.2016 அன்று மாலை ராஜபாளையம் தொலைபேசிநிலையத்தில்  கிளைத்தலைவர்   தோழர் M.ராமதாஸ்  அவர்களது தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர் P.பிள்ளையார் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். 

       கிளைப்பொருளாளர் தோழர் S.மன்னண்மார்த்தாண்டன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

             மாவட்டப்பொறுப்புச் செயலர் தோழர் D.ரமேஷ் , மாவட்ட அமைப்புச் செயலர் தோழர்M.ராஜேந்திரன் , மாவட்டச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் R.அழகர் , முன்னாள் திருவில்லிபுத்தூர் கிளைச்செயலர் தோழர் G.கூடலிங்கம் , முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர் S.தளவாய்பாண்டியன் மற்றும்   முன்னாள் மாநில அமைப்புச் செயலர் தோழர் I.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள்.

தலைவராக தோழர் சுந்தரமகாலிஙம் அவர்களும்
செயலராக தோழர் மன்னண்மார்த்தாண்டன் அவர்களும்
பொருளராக தோழர் மாரியப்பன் அவர்களும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்