21 November 2016

சம்பள முன்பணம்

  ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவிடும் வகையில் சில ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. 


இந்த ஏற்பாடு BSNL ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நமது மாநில நிர்வாகமும் உத்தவிட்டுள்ளது.

அதன்படி : 

நவம்பர்'2016 மாதச் சம்பளத்தில்

  •  ரூ.10000/- சம்பள முன்பணம் CASH பணமாகப் பட்டுவாடா செய்யப்படும். 
  • மீதமுள்ள சம்பளம் வழக்கம்போல் வங்கிக்கணக்கில் போடப்படும். 
  • சம்பள முன்பணம் அதிகாரிகளுக்கு கிடையாது.
  • சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் தங்களது விருப்பத்தை இன்று 21.11.2016க்குள் எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.