1 June 2017

சீர்மிகு சிவகாசி மாவட்டச் செயற்குழு

  

நமது மாவட்டச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 30.05.2017 செவ்வாய்கிழமை அன்று சிவகாசி OCB தொலைபேசி நிலைத்தில் மாவட்டத்தலைவர் தோழர் ராகவன் தலைமையில் நடைபெற்றது.
 
தோழர் மோகன்தாஸ் தலைமையிலான தோழர் குழாம் மாவட்டச் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர். தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
 
செயற்குழுவின் தொடக்கமாக தோழர் ராகவன் செயற்குழு விவாத்திக்க வேண்டிய கருப்பொருளை விளக்கி உரையாற்றினார்.
 
மாவட்ட அமைப்புச்செயலர் தோழர் ராஜேந்திரன் அஞ்சலி உரையற்றினார்.
 
சிவகாசி கிளைச் செயலர் தோழர் கருப்பசாமி செயற்குழுத் தோழர்களை வரவேற்று பேசினார்.

மாவட்ட துணைத்தலைவர் தோழர் சுந்தர்ராஜன் நன்றியுரையாற்றினார்.

பணிஓய்வு பெறும் தோழர் நாகராஜன் மாவட்டச் செயற்குழுவில் கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய விருந்து  வழங்கினார். தோழரின் பணி ஒய்வுக்காலம் சிறப்புற அமைய மாவட்டச்சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.