2 May 2017

தலைமைப் பொது மேலாளருடன் சந்திப்பு :
நமது மாநிலச் சங்க நிர்வாகிகள் இன்று தலைமைப் பொது மேலாளரை சந்தித்து கீழ்கண்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.
1. விருதுநகர் மாவட்ட பிரச்னைகள்.
 
(i) விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் பாரபட்ச போக்கு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த போக்கு மாற உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று நிர்வாகத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

(ii) இரு தோழர்களுக்கு இம்மியூனிட்டி மாற்றல்களுக்கான உத்தரவு இன்று வெளியாகும் என உறுதியளிக்கப்பட்டது .
 
2. ஒப்பந்த ஊழியர்கள் பற்றிய பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொது மேலாளர் நிர்வாகத்துடன் விரிவான விவாதம் நடத்தப்படும்
 
3. மாநில கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

நமது மாவட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி தீர்வு கண்ட மாநிலச் சங்கத்திற்கு விருதுநகர் மாவட்டச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.