காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தயராவீர்...
அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல்...
அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று 14.11.2018 டெல்லியில் கூடியது. கூட்டமைப்பின் தலைவர் தோழர் சந்தேஷ்வர் சிங் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டமைப்பின் கோரிக்கைகளான ஊதியமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளின் தற்போதைய நிலவரத்தை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பு சங்க பொதுச்செயலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி பரிசீலித்தது. மேலும் நமது கோரிக்கைகளை நிராகரித்து தொலைத்தொடர்பு இலாகாவின் கடிதம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது எனவும் அதற்காக தோழர்களை தயார்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,
மேலும் அரசின் திட்டங்களான NOFN, NFS and LWE ஆகியவற்றை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.