ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்களின் இணைப்பு விழா
தமிழக ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்களின் இணைப்பு விழா கூட்டம் தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகம் சென்னை NFTE சங்க அலுவலகத்தில் 19-01-2019 அன்று தோழர் ஆர்கே அவர்கள் தலைமையில் நடைபெற்றது
NFTCL மாநிலச் செயல் தலைவர் தோழர் V. மாரி, NFTCL திருச்சி மாவட்டச் செயலர் தோழர்Y.மில்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலர் தோழர் R. செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். K. நடராஜன் மாநிலச் செயலர் NFTE துவக்கவுரையாற்றினார். தோழர் K. அசோகராஜன் , NFTCL அகில இந்திய துணைத் தலைவர், புதுவை கருத்துரையாற்றினார்.
மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் P.காமராஜ் , தோழர் A.செம்மலமுதம், மாநில உதவிச்செயலர் தோழர் G.S .முரளிதரன், தோழர் சேது , தோழர் தமிழ்மணி மற்றும் TMTCLU மாநிலப் பொருளாளர் தோழர் M.விஜய் ஆரோக்யராஜ் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
தோழர் P.காமாராஜ், தோழர் V.மாரி, தோழர் M.விஜய் ஆரோக்யராஜ், தோழர் Y.மில்டன், தோழர் A.S.குருபிரசாத் ஆகிய உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடத்த, அகில இந்திய சங்கம் அமைப்பதை துரிதப்படுத்திட, மாநில முழுவதும் ஒற்றுமையைக் கட்டி ஒப்பந்த ஊழியர்களை ஒன்றுபடுத்த மாவட்ட மாநாடுகளை நடத்தி பிறகு மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்யும்
இணைப்பு விழா நிறைவேற்றிய தீர்மானங்கள்
· தமிழகத்திலுள்ள ஆளில்லா தொலைபேசி நிலையங்கள், CSC, SALES, BROAD BAND, TOWER Maintance, அலுவலகப் பிரிவு ஆகிய பகுதிகளிலுள்ள இடங்களில் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி காலியிடங்களை நிரப்பிடுக..
· ஒப்பந்த ஊழியர்கள் பயன் பெறும் வகையில் EPF, ESIக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அந்தந்த அலுவலங்களில் முறையாக மாதாமாதம் செலுத்திவதை கண்கானிக்க வேண்டும்.
· போனஸ் வழங்குவதில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உத்திரவின்படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸ் ரூ 7000- வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்.
· கிராஜ்விட்டி :- பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972ல் உள்ளபடி BSNLல் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
· ஊதியம்:- மத்திய தொழிலாளர் நல ஆனையத்தின் உத்திரவு படி மாதா மாதம் 7ந் தேதிக்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
· மத்திய சங்கம்:- NFTCW என்ற புதிய பெயரில் மத்திய சங்கம் அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
· மாநில மாநாடு:- தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடுகளை நடத்திய பிறகு மாநில மாநாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
· கருத்தரங்கம்:- ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை விளக்க கருத்தரங்கம் பிப்ரவரியில் திருச்சியில் நடத்துவது.
· சமவேலைக்கு சம ஊதியம்: மாநில உயர்நீதி மன்றத்தில் உள்ள சம வேலைக்கு சம ஊதியம் , வாராந்திர ஓய்வு ஊதிய வழக்கு துரிதப்படுத்த வேண்டும்.