தொடர்ந்து முன்னேறுவோம்...
நாடு முழுவதும் நமது மூன்று நாள் வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
வர்க்க கடமையாற்றிய தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்….
நமது கோரிக்கைகளை தீர்ப்பதில் நிர்வாகங்களின் அசட்டைத்தனம் நீடிக்கிறது.
ஆகவே நேற்று 20/02/2019 கூடிய அனைத்து சங்க கூட்டமைப்பு தொடர்ந்து நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல் பின்வரும் முடிவுகளை அறிவித்துள்ளது.
- 06/03/2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி..
- 28/02/2019க்குள் அனைத்து MPக்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
- பிரதமர் மற்றும் இலாக்கா அமைச்சருக்கு TWITTER மூலம் கோரிக்கை விடுத்தல்..
- இலாக்கா அமைச்சரை விரைவில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தல்...
தோழர்களே…
அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்…
நமது நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்…