JTO போட்டித் தேர்வு அறிவிப்பில் திருத்தம்...
2016-17 மற்றும் 2017-18 ம் ஆண்டுக்கான JTO பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வு 20.01.2019 அன்று நடைபெறும் என 30.10.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பில் திருத்தம் செய்து நேற்று 15.11.2018 அன்று உத்தவிட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவற்கு மட்டுமே தேர்வு நடத்தவேண்டும் என்றும் அடுத்த வருடத்துக்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வை அடுத்தடுத்த வருடங்களில் தான் தேர்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் 20.01.2019 அன்று 2016-17ம் வருடத்துக்கான JTO (50% Qouta) பதவிகளுக்கு மட்டுமே போட்டித்தேர்வு நடைபெறும் என்றும் 2017-18க்கான போட்டித்தேர்வு பின்பு நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கெடுக்க தோழர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.