20 June 2016

6வது மாவட்ட மாநாடு

வெற்றிகரமான 6 வது மாவட்ட மாநாடு

நமது சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு 18.06.2016 சனிக்கிழமை விருதுநகர் விஸ்வேஸ்வரா அரங்கத்தில் தோழர் கருணாகரன் தேசியக் கொடிஏற்றிட , தோழர் செல்வராஜ் சங்கக் கொடியினை ஏற்றிட , தோழர் ரமேஷ் அஞ்சலியுரை நிகழ்த்திட,மாவட்டச் செயலர் தோழர் சக்கணன் தோழர்களை வரவேற்க  ,மாவட்டத் தலைவர் தளவாய்பாண்டியன் தலைமையேற்க மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களது துவக்கவுரையோடு மாவட்ட மாநாடு சிறப்பான துவக்கத்தைக் கண்டது.

மாநாட்டை தோழர் பாலு - தூத்துக்குடி , தோழர் சேது , முன்னாள் விருதுநகர் மாவட்டச் செயலர் தோழர் காளிமுத்து , மாநில உதவிச் செயலர் தோழர் விஜயரங்கன் -  மதுரை , மதுரை மாவட்டச் செயலர் தோழர் குருநாதன் , மதுரை மாவட்டத்தலைவர் தோழர் ராஜேந்திரன் , காரைக்குடி மாவட்டச் செயலர்  தோழர் மாரி , இளைஞர் அணியிலிருந்து காரைக்குடி தமிழ்மாறன் , சேவா சங்கம் சார்பாக தோழர் பிரேம்குமார் , மாநிலத்துணைச் செயலர் ,  TEPU சங்கம் சார்பாக தோழர் சேசுராஜா , AIBSNLOA சார்பாக தோழர் முருகேசன் , SNEA சங்கம் சார்பாக தோழர் செந்தில்குமார் , AIBSNL PEWA சங்கம் சார்பாக  தோழர் லத்தீப்  ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

நிர்வாகத்தின் சார்பாக திரு S.ராதாகிருஷ்ணன் ,DGM(Admn.) , திரு. S.ராஜகோபால் AGM(Admn.) அவர்களும் வாழ்த்திப்பேசினர்.

CPI மாவட்டச் செயலர் தோழர் ராமசாமி இயக்கத்தின் மேம்பாடு குறித்து உரையாற்றினார்.

தோழர் ஆர்கே நமது மாவட்டச் சங்க இணையதளத்தினை துவக்கி வைத்து சிறப்புறையாற்றினார்.

தோழர்களின் எகோபித்த ஆதரவோடு மாவட்டத்தலைவராக தோழர் ராகவன் அவர்களும் , மாவட்டச் செயலராக தோழர் ராம்சேகர் அவர்களும் , மாவட்டப் பொருளராக தோழர் செல்வராஜ் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதியாக தோழர் சக்கணன் நன்றி கூறிட மாநாடு இனிதே நிறைவுற்றது.

செயல்பாட்டறிக்கை      நிர்வாகிகள்பட்டியல்  மாநாட்டு புகைப்படங்கள்