25 October 2016

வெற்றிகரமான தர்ணா போராட்டம்

11 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நமது கூட்டமைப்பின் சார்பாக 24.10.2016 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விருதுநகர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.

போராட்டத்திற்கு NFTE மாவட்டத்தலைவர் தோழர் G.ராகவன் தலைமை தாங்கினார்.

தோழர் ராம்சேகர் அவர்கள் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

இந்தியகம்யூனிஸ் கட்சியின் மாவட்டச் செயலர் தோழர்.தி.ராமசாமி , மாவட்ட உதவிச்செயலர் தோழர் வெ.அழகிரிசாமி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சீனிவாசன் ஆகியோர் நமது தர்ணா போராட்ட த்தை வாழ்த்திப் பேசினார்கள்.




நமது கூட்டணிச்சங்கமான சேவா சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர் பிரேம்குமார் அவர்களும் , மாவட்டச் செயலர் தோழர் ராஜகுரு அவர்களும் சிறப்பான வாழ்த்துரையை வழங்கினர்.



மேலும் நமது சங்கத்தின் சார்பாக மாவட்ட உதவித்தலைவர் தோழர் மன்னண் மார்த்தான்டன் , மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளார் தோழர் ராமதாஸ் , தோழர் அழகர் ஆகியோரும் , மாவட்ட அமைப்புச்செயலர் தோழர் ராஜேந்திரன் அவர்களும் , தோழர் சீனிவாசன் அவர்களும்  , மாவட்ட பொறுப்புச் செயலர் தோழர் ரமேஷ் அவர்களும் தர்ணா போராட்டத்தை விளக்கிப்பேசினார்கள்.






நமது தொழிற்சங்க ஆசான் தோழர் சேது நம்பூதிரி சங்கத்தின் இயலாமையினால் ஒட்டுமொத்த BSNL ஊழியர்கள் அனுபவித்து வரும் சங்கடங்களையும் , இழப்புகளையும் விவரித்து சிறப்புரையாற்றினார். 



இறுதியில் மாவட்ட அலுவலக கிளைச்செயலர் தோழர் சம்பத்குமார் அவர்கள் நன்றியுரையாற்றிட தர்ணா போராட்டம் நிறைவுபெற்றது.


தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்கிய தோழர்கள் , தோழியர்கள் அனைவருக்கும் நமது கூட்டமைப்பு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.