25 October 2016

NATIONAL FORUM OF BSNL WORKERS

விருதுநகர் மாவட்டம் 

--------------------------------------------------------------------------------------------------------

கண்டன ஆர்ப்பாட்டம்

தோழர்களே !

நமது நிறுவனத்தின் 60000 டவர்களை பிரித்து தனிநிறுவனமாக மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு முற்றிலுமாக தனியார் ஆதரவுப் போக்குடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அரசின் இம்முடிவு நமது நிறுவனத்தை மேலும் பலவீனமாக்கும் என்பதால் நமது நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  டவர் நிறுவனம் அமைக்கும் அரசின் முடிவை  எதிர்க்கிறோம்.

ஆகவே நமது கூட்டமைப்பின் சார்பாக 27.10.2016 அன்று கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தோழர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுகிறோம்.

தோழமையுள்ள

D.ரமேஷ்                                                 G.ராஜகுரு                            A.ஜேசுராஜா            NFTE                                                               SEWA                                               TEPU