16 November 2016

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


நேற்று 15.11.2016 அன்று நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் நாம் இன்று 16.11.2016 முதல் நடத்தவிருந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.


பேச்சுவார்த்தையில் மாவட்டச் செயலர் தோழர் ரமேஷ் , மாவட்டத்தலைவர் தோழர் ராகவன் , மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட அலுவலகக் கிளைச்செயலர் தோழர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
உடன்பாட்டின் படி
  • சீருடை வழங்கிட தல மட்ட அதிகாரிகளிடமிருந்து விபரங்கள் கோரப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் சீருடை விரைவில் வழங்கப்படும்.
  • சைக்கிள் பராமரிப்புப் படி மற்றும் சலவைப்படி ஆகியவை கோட்ட அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி வழங்கப்படும்.
  • மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு சிறப்பு மாற்றல் வழங்கிட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தோழர் மதிசேகர் - சிவகாசி , தோழர் சந்திரசேகரன் - சிவகாசி , தோழர் ஹீரா - விருதுநகர் ஆகிய தோழர்களின் மாற்றல் பொதுமேலாளர் அவர்களது அடுத்த வருகையின் போது பேசித்தீர்க்கப்படும்.
  • விடுபட்ட மருத்துவ பில்கள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.
போராட்டத்திற்கு தீர்வு கண்டிட வழிகாட்டுதல் வழங்கிய மாநிலச் செயலர் தோழர் நடராஜன் , மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் , மாநில உதவிச் செயலர் தோழர் முரளிதரன் , தொழிற்சங்க ஆசான் தோழர் சேது ஆகிய தோழர்களுக்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


மேலும் போராட்டம் வெற்றிபெற ஒத்துழைத்த அனைத்து கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்கநிர்வாகிகளுக்கும்  மற்றும் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து தோழர் தோழியர்களுக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.