10 October 2017

ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL
விருதுநகர் மாவட்டம்

தோழர்களே! தோழியர்களே!

3வது ஊதிய மாற்றத்தை விரைவுபடுத்தவும் , டவர் நிறுவனத்தை அமைக்கும் அரசின் முடிவை தடுத்து நிறுத்தவும் , வாடிக்கையாளர் சேவைமையங்களை தனியார்மயப்படுத்துவதை எதிர்க்கவும் அனைத்து சங்கங்களும் இனி ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL என்ற பதாகையின் கீழ் செயல்படுவது என மத்திய சங்கங்கள் சார்பாக 04.10.2017 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டம் நேற்று 09.10.2017 அன்று NFTE மாவட்டச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

NFTE சங்க மாவட்டச் செயலர் தோழர் ராம்சேகர் கூட்டமைப்பின் தலைவராகவும் , BSNLEU சங்க மாவட்டச்செயலர் தோழர் ரவீந்திரன் செயலராகவும் , SNEA சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர் செந்தில்குமார் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

 : கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன :

16.10.2017 

   விருதுநகர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக மாவட்டந்தழுவிய ஆர்ப்பாட்டம் 

15.11.2017

  தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம்  கோரிக்கை  மனு அளிப்பது.

 16.11.2017 

 விருதுநகரில் மனிதச்சங்கிலி இயக்கம் நடத்துவது 

12.12.2017&13.12.2017 

 இரண்டு தினங்கள் வேலைநிறுத்தம் நடத்துவது


போராடுவோம்! வெற்றி பெறுவோம்! அணிதிரள்வீர் தோழர்களே!

தோழமையுடன்

மாவட்டச்செயலர்கள்

BSNLEU – NFTE – SEWA – TEPU – SNEA – AIBSNLEA - AIGETOA


விருதுநகர் மாவட்டம்