3 June 2018

           மத்திய பொதுத்துறை ஊழியர் சங்க கருத்தரங்க முடிவுகள்

   பொதுத்துறை ஊழியர்களுக்கெதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து கடந்த மாதம் 30.05.2018 அன்று டெல்லியில்  அனைத்து மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
                          
       கருத்தரங்கில் இன்றைய மத்திய அரசின் பொதுத்துறைக்கு எதிரான நட வடிக்கைகள் , பொதுத்துறை பங்குகள் விற்பனை, தனியார் ஆதரவு போக்கு , தாமதமாகும் ஊதிய மாற்றம் , DPE அமைப்பின் ஊழியர் விரோத நிபந்தனைகள் , தொழிலாளர் மற்றும் சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பணிப்பாதுகாப்புக்கு உலைவைக்கும் " கால வரம்பிற்குட்பட்ட வேலை நியமன சட்டம் " [ Fixed Term Employment ] போன்றவை விவாதிக்கப்பட்டன.

            நமது சங்கத்தின் சார்பாக பொதுச்செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங் , துணைப்பொதுச்செயலர் தோழர் சேஷாத்ரி அவர்களும் தமிழ்மாநிலச்சங்கத்தின் சார்பாக மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் , மற்றும் மாநிலச்செயலர் தோழர் நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.