5 June 2018


விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்சமான போக்கு .

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை சூழல் மாற்றல் நடை பெற்று வருகிறது .ஆனால் இந்த ஆண்டு திடீரெனெ நிர்வாகம் 3 ஆண்டுக்கு ஒரு முறை என கார்ப்பரேட் ( 2016 ) அலுவலக உத்தரவைக்காட்டி, சங்கங்களின் மத்தியில் கருத்து ஒற்றுமை இல்லை எனக்கூறி பிரச்சனையை கை கழுவுகிறது .

2016ல் மாற்றலில் சென்ற தோழர்கள் 2018ல் தனது சொந்த ஊருக்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் , மீண்டும் ஓராண்டு நீடிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் .

மாவட்டநிர்வாகம் பிரச்சனையை தீர்க்காமல் மாநிலநிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதுதல் என்பது பிரச்சனையை தட்டி கழிப்பதாக உள்ளது..

முறையாக பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் போராட்டம் தவிர்க்க இயலாது ……GM HR அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் ,,6 /6 /2018 அன்று மாநிலநிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை  தீர்க்கும் என நம்புகிறோம் .

இல்லை எனில் நமது போராட்டத்தை திட்டமிடுவோம் , தீவிரப்படுத்துவோம் …

- மாநிலச்சங்க இணைய தளத்திலிருந்து