4 July 2018



செய்தித்துளிகள்...

  • நமது சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெறவுள்ளது.

  • ஜீலை’2018 முதலான 0.8 சத பஞ்சப்படி உயர்வுக்கு DPE இலாகா உத்தரவு வெளியிட்டுள்ளது. BSNL உத்தரவு விரைவில் வெளியாகும்.

  • 3வது ஊதிய மாற்றம் காரணமாக ஏற்படும் நிதிச்சுமை குறித்து BSNL நிர்வாகம் DOT இலாகாவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

  • 3வது ஊதிய மாற்றக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களும் , பொதுச்செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  • அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் நமது சங்கத்திற்கான சந்தாப் பிடித்தம் உயர்த்தப்படவுள்ளது. நிர்வாக உத்தரவு விரைவில் வெளியாகும்.