14 September 2018


ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவின் 5வது கூட்டம்  

முன்னதாக திட்டமிட்டபடி ஊதிய மாற்றக் கூட்டுக்குழு  ஐந்தாவது முறையாக இன்று 14.09.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் கூடியது.

இன்றைய  கூட்டத்தில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் 10.09.2018 அன்றைய கூட்டத்தில் நிர்வாகத்தரப்பு சார்பாக முன்மொழியப்பட்ட ஊதிய நிலைகளை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். எனினும் ஊதிய நிலைகளில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளதா என ஆராய்வதற்காக ஒரு வார கால அவகாசத்தை ஊழியர் தரப்பு கோரியுள்ளது.

ஊதியக்குழு மீண்டும் 28.09.2018 அன்று கூடவுள்ளது.

இந்நிலையில் படிகள் திருத்தம்  (ALLOWANCES) குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் 26.09.2018 அன்று கூடி விவாதிக்கவுள்ளனர்.