2 January 2019


2017-18ம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் 

பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் சமுக கடமையை நிறைவேற்றுவதற்காகவும் , உற்பத்தியின் தன்னிறைவை எட்டும் நோக்கோடும் 29 கோடி ரூபாய் முதலீட்டுடன் 5 நிறுவனங்கள் முதலாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் உருவாக்கப்பட்டன. தற்போது 30.03.2018 தேதியில் 339 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போதைய அதன் முதலின மதிப்பு 13,73,412 கோடி ரூபாயாக உள்ளது. 

339 நிறுவனங்களின் செலுத்தப்பட்ட மூலதனம் 31.03.2018 அன்று 2,49,988 கோடியாக உள்ளது. இது 31.03.2017 அன்றை மதிப்பை விட 7.68% அதிகம். 

31.03.2018 அன்றைய தேதில் 13,74,412 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பு 2017ம் ஆண்டை விட 10.24% அதிகம். 

2017-18 ஆண்டு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் இணைந்து 21,55,948 கோடி ரூபாய் செயல்பாட்டு வருவாயை ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.24 அதிகம் 

அனைத்து நிறுவனங்களின் மொத்த வருமானம் 2017-18ம் ஆண்டில் 20,33,732 கோடியாக உள்ளது. 

184 லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் இணைந்து 2017-18ம் ஆண்டு காலத்தில் 1,59,635 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளன. 

71 நட்டமீட்டும் நிறுவனங்களின் 2017-18ம் ஆண்டின் மொத்த நட்டம் 31,261 கோடி ரூபாய். 

257 நிறுவனங்கள் இணைந்து 2017-18ம் ஆண்டில் 1,28,374 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. 

2017-18ம் ஆண்டில் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்திய ஈவுத் தொகை 76,578 கோடி ரூபாய். 

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய ஊழியர்களின் எண்ணிக்கை 10.88 லட்சமாக உள்ளது. அவர்களுக்கு 1,57,621 கோடி ரூபாய் 2017-18ம் ஆண்டில் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 

339 பொதுத்துறை நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் விவசாய துறையிலும் , சுரங்கத்துறையில் 24 நிறுவனங்களும் , உற்பத்தி துறையில் 100 நிறுவனங்களும் , சேவைத் துறையில் 130 நிறுவனங்களும், தொலை தொடர்புத்துறையில் 8 நிறுவனங்களும் , கட்டுமானத்துறையில் 82 நிறுவனங்களும் செயல்படுகின்றன. 

லாபம் சம்பாதிக்கும் முதல் 10 நிறுவனங்களில் 21346 கோடி ரூபாய் லாபத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முதலிடத்திலும் , 19945 கோடி ரூபாய் லாபத்துடன் ஆயில் & நேச்சுரல் கேஸ் கார்ப்பரேசன் இரண்டாமிடத்திலும் , நேசனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் 10343 கோடி ரூபாய் லாபத்துடன் முன்றாமிடத்திலும் உள்ளது. 

நட்டமீட்டும் நிறுவனங்களில் பட்டியலில் 7993 கோடி ரூபாய் நட்டத்துடன் நமது BSNL நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 5338 கோடி ரூபாய் நட்டத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. MTNL நிறுவனம் 2973 கோடி ரூபாய் நட்டத்துடன் மூன்றாமிடத்தில் உள்ளது. 

தொலைத் தொடர்புத் துறையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.18 பில்லியனாக உள்ளது. அதன் பொருளாதார மதிப்பு 2020ம் ஆண்டில் 14 டிரில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொலை தொடர்புத்துறையில் 10.74 சதவிகிதத்தை பொதுத்துறை நிறுவனங்களும் , 89.26 சதவிகிதத்தை தனியார் நிறுவனங்களும் அங்கம் வகிக்கின்றன.

தொலைபேசி இணைப்புகளின் அடர்த்தி 91.64 சதவிகிதமாக உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் 1.74 லட்சம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக நமது BSNL நிறுவனம் உள்ளது. மொத்த வருவாயில் 60% அதிகமான தொகையை ஊழியர்களுக்கு அது ஊதியமாக வழங்கி வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அதன் வருவாயில் வெறும் 10% மட்டுமே ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றன. தொலைதொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் கடன் தொகை 8 லட்சம் கோடி எட்டியுள்ளது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான BSNLக்கு வெறும் 15000 கோடி அளவுக்கு மட்டுமே கடன் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. 

அரசின் தனியார் ஆதரவு கொள்கைகள் தொலைத்தொடர்புத் துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளன. இருப்பினும் தனியார் நிறுவனங்களின் போட்டியை அவை திறமையாக எதிர்கொண்டு வருகின்றன.