2 January 2019

ஜனவரி பொது வேலைநிறுத்தம்
வாயில் கூட்டம் நடத்திட அறை கூவல்..

மத்திய அரசின் தொழிலாளர் விரோத , பொதுமக்கள் விரோத , கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை கண்டித்த நாடு தழுவிய ஜனவரி 2019 - 8 & 9 ஆகிய இரு நாட்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு AITUC, CITU , BMS , LPF உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலைத்  தொடர்ந்து...

நமது BSNL நிறுவனத்தில் NFTE , BSNLEU , BSNLMS , TEPU ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்து வேலைநிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திடம் கூட்டாக அளித்துள்ளன.

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை ஊழியர்களிடம் விளக்கும் விதமாக 05.01.2019 அன்று மதிய உணவு இடைவேளையில் வாயிற் கூட்டம் நடத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.