15 February 2019

10% ஊதிய நிர்ணயம் - கூட்டமைப்பு ஏக மனதாக முடிவு...

கடந்த இரண்டு நாட்களாக BSNL CMD அவர்களும், மனித வள இயக்குனரும்  AUAB தலைவர்களுடன் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.  3வது ஊதிய மாற்றம் தொடர்பான DoTயின் முன்மொழிவுகளை நமக்கு தெரிவித்து வருகின்றனர். 

அதன் படி 0% ஊதிய நிர்ணய பலனுடன் ஊதிய மாற்றம் உடனடியாக அமலாக்கப்படும்.  அதன் பின் 5% ஊதிய நிர்ணய பலனுக்காக, தொலை தொடர்பு அமைச்சர், மத்திய அமைச்சரவைக்கு கொண்டு செல்வார் என DoT நிர்வாகம் தெரிவித்தது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர்கள்  தங்களுக்குள் விவாதித்து, 10% ஊதிய நிர்ணய பலன் தான் நமது குறைந்தபட்ச கோரிக்கை  என ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர். இம்முடிவை BSNL CMD மூலமாக DoTக்கு தெரிவித்துள்ளனர். 

0% ஊதிய நிர்ணயபலன் தான் ஊதிய மாற்றத்திற்கு வழங்குவார்கள் என்பதையே, DoTயின் முன்மொழிவிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. 5% ஊதிய நிர்ணய பலனுக்கு மத்திய அமைச்சரவைக்கு கொண்டு செல்வேன் என்கிற மத்திய தொலை தொடர்பு அமைச்சரின் வாக்குறுதியை நம்ப முடியாது.  மத்திய அமைச்சரும், DoTயும் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் மீறினார்கள் என்பது தான் கடந்த கால அனுபவங்கள்.  

எனவே 18.02.2019 முதல் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து தயாரிப்பு பணிகளையும் நமது அனைத்து தோழர்களும் முழு வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஏதாவது முன்னேற்றங்கள் இருந்தால் உடனடியாக தோழர்களுக்கு தெரிவிக்கப்படும் என மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.