7 March 2019

சம்பளப் பட்டுவாடா கோரி வலுக்கும் போராட்டங்கள்...


டெல்லியில் இன்று (07/03/2019) கூடிய அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தலைவர்கள் நமது BSNL நிறுவனத்தின் CMDயைச் சந்தித்து ஊழியர்களுக்கு பிப்ரவரி சம்பளம் வழங்கப்படாதது குறித்த தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும் மார்ச் 12 முதல் கார்ப்பரேட் அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். பிரச்சினைக்கு தீர்வுகாணப்படாவிடில் போராட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாநில , மாவட்ட மையங்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிட அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

போர்ப்பதட்ட சூழ்நிலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் அலுவலகம் நோக்கிய பேரணியை ஏப்ரல் மாதத்தில் நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிப்ரவரி சம்பள பட்டுவாடா தாமதத்தைக் கண்டித்தும் , உடனடியாக சம்பளம் வழங்கிடக் கோரியும் தமிழ் மாநில அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக நாளை (08/03/2019) அன்று சென்னையில் CGM அலுவலகத்தில் ஒரு நாள் அடையாள தர்ணாப் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.