இன்றோடு நமது விருதுநகர் மாவட்டச் சங்க இணைய தளத்தினை பார்வையிட்ட தோழர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழ் மாநிலத்திலேயே கடைசியாக துவக்கப்பட்டது நமது இணைய தளமே.
தோழர்கள் ஆர்கே மற்றும் பட்டாபி ஆகியோரது தூண்டுதலின் பேரில் 2016ம் ஆண்டு துவக்கப்பட்டது. துவக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட தளமாக நமது இணைய தளம் விளங்குகிறது.
நேர்த்தியான வடிவமைப்பு , அதிகமான பக்கங்களை கொண்ட தளமாக நமது இணைய தளம் உள்ளது.
நமது சங்க இதழான ஒலிக்கதிருக்கென தனி பக்கம் துவக்கப்பட்டு அதில் 2009 முதல் 2019ம் ஆண்டு வரையிலான இதழ்கள் ஆண்டு வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக உத்தரவுகள் , சங்க அறிக்கைகள் ஆகியவை தனித்தனி பங்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு களஞ்சியமாக நமது இணையதளம் செயல்பட்டு வருகிறது.
இணைய தளத்தினை பார்வையிட்ட அத்துணை தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.