5 February 2021

பொதுத்துறை நிறுவனமெனும் விதைநெல்லை விற்கும் மாபாவிகள்!

பி.எஸ்.என்.எல் என்ற லட்சக்கணக்கானோருக்கு வேலை தந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை தர மறுக்கப்பட்டு, ரிலையன்ஸ்சின் ஜியோவை வளர்ப்பதற்காக திட்டமிட்டு அழிக்கப்பட்டது! 2ஜி ஊழலைவிட மிகக் கொடியதும், பிரம்மாண்டமானதும்,பல லட்சம் பேர் வேலை பறிபோக காரணமானதும் இது தான்! அந்த 2ஜி ஊழலை எழுதிய அளவில்,பேசிய அளவில் பத்தில் ஒரு பங்கைக் ஊடகங்கள் 4ஜி அலைக்கற்றை விவகாரத்தில் செய்யவில்லை! ஏன் அரசு நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை மறுக்கப்பட்டு, அம்பானிக்கு வழங்கப்பட்டது என வலுவான கேள்வி எழவில்லை!