31 October 2018

எழுச்சி மிகு தர்ணா போராட்டம்



ஊதிய மாற்றம் , ஓய்வூதிய மாற்றம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவலின் படி தர்ணா போராட்டம் National Forum of BSNL Workers அமைப்பின் சார்பாக நேற்று 30.10.2018 அன்று விருதுநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில்   சிறப்பாக நடைபெற்றது.

போராட்டத்திற்கு NFTE மாவட்டத்தலைவர் தோழர் M.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டணிச் சங்கங்களின் சார்பாக தோழர் R.பிரேம்குமார் , மாநிலத்துணைச்செயலர் , SEWA   தோழர் V.கணேசன் , மாவட்டச்செயலர் TEPU  தோழர் S.பாண்டுரெங்கன்,  மாவட்டச்செயலர் FNTO ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப்பேசினர்.



AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர் சண்முகக்கனி அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.













நமது NFTE  சங்கத்தின் சார்பாக முன்னாள் மாவட்டச்செயலர் தோழர் S.P.மதிவாணன் , மாவட்டச்செயலர் தோழர் N.ராம்சேகர் , மாநில உதவிச்செயலர் தோழர் D.ரமேஷ் , மாவட்ட பொருப்புச்செயலர் தோழர் P.சம்பத்குமார் , மாவட்டப்பொருளாளர் தோழர் S.வெங்கடப்பன் , மாவட்ட அமைப்புச்செயலர் தோழர் R.அழகர் ஆகியோர் தர்ணாப் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர்.

மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.பாஸ்கரன் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்.