23 June 2018

கடமைகள் நம்மை வழி நடத்தட்டும்!

தொலைத்தொடர்பு தொழிற்சங்க இயக்கம் இன்று வரலாற்று சந்திப்பில் நிற்கிறது.  தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. DPE விதித்துள்ள சாத்தியப்பாடு நிபந்தனைகளை முறியடித்து ஊதிய மாற்றம் காணல், புதிய டிஜிடல் கொள்கையில் பொதுத்துறைக்கான முக்கியத்துவத்தை மீண்டும் ஏற்படுத்துதல், கட்டவிழ்த்தல் கொள்கையில் நம்முடைய செல்வாதாரங்கள் கொள்ளை போகாமல் தடுத்தல், கோபுரங்கங்கள் மூலமான வணிகத்தை நம்மிடமே தக்கவைத்தல், ஏப்ரல் 2018 ல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற அனைத்து பொதுத்துறை தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அபாயகரமான கொள்கை முடிவுகள் என முக்கியமான பல பிரச்சனைகள். இவற்றை எதிர்கொண்டு நமது நலன்களை முன்னெடுத்துச் செல்ல பிரச்சனைகளை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.