19 June 2018

FAMILY PLANNING ALLOWANCE ரத்து செய்யப்படுகிறது

மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஊழியர்களுக்கு அவர்களை சிறுகுடும்பத்தை அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில் FAMILY PLANNING ALLOWANCE வழங்கி வந்தது. 

நிதி அமைச்சகம் தனது 07.07.2017 அன்றைய உத்தரவின் மூலம் அதனை ரத்து செய்தது.

இந்நிலையில் நமது BSNL நிறுவனத்திலும் FAMILY PLANNING ALLOWANCEஐ நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக   BSNL நிறுவனத்தில் பணிபுரியும் நேரடி நியமன ஊழியர்கள் மற்றும்  DOTயிலிருந்து இணைந்த ஊழியர்கள் அனைவருக்கும் 01.07.2018 முதல்  FAMILY PLANNING ALLOWANCEஐ நிறுத்துவது என முடிவெடுத்து நிர்வாகம் இன்று 19/06/2018 அன்று  உத்தரவிட்டுள்ளது.