20 June 2018

JAO கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகள்....

JAO கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகளை உருவாக்குவது சம்பந்தமாக நமது மத்திய சங்கம் இன்று 20.06.2018 அன்று Director(Finance) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

JAO கேடருக்கான புதிய ஆளெடுப்பு விதிகளை உருவாக்குவதற்கு  BSNL நிறுவனத்தின்  High Power Committee அனுமதியளித்து ஒரு வருடம் கடந்த பின்பும் அதற்கான் ஏற்பாடுகள் நடைபெறவில்லை என்றும். இதனால் நடைபெற வேண்டிய இலாகாப் போட்டித் தேர்வு நடைபெறாமல் உள்ளது என்றும். 


  • மொத்த பதவிகளில் 50%ஐ ஊழியர்களுக்கே ஒதுக்க வேண்டும்.
  • ஊழியர்களுக்கு   அவர்களது கேடரில் ஐந்து வருடங்கள் சேவையோடு எவ்வித ஊதிய கட்டுப்பாடும்  இன்றி JAO தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  • ஊழியர்களுக்கு 55வயது வரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  • ஸ்கிரீனிங் தேர்வில் தேர்வானவர்களையும் , DOT காலத்தில் நடைபெற்ற JAO-1 தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களையும்   40%  இலாகா போட்டித்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பரிட்சைக்கும் 30%ஐ தகுதி மதிப்பெண்ணாகவும் , 37%ஐ மொத்த மதிப்பெண்ணாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும் 


போன்ற கோரிக்கைகளை  புதிய ஆளெடுப்பு விதிகளில் இணைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் மத்திய சங்கம் குறிப்பிட்டுள்ளது.