20 June 2018

Telecom Technician 
கேடருக்கு ஆளெடுப்பு செய்திடுக...

நமது மத்திய சங்கம் Telecom Technician கேடருக்கு ஆளெடுப்பு செய்திடக் கோரி இன்று 20/06/2018 அன்று Director(HR) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 12/06/2018 அன்று நடைபெற்ற தேசிய கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஊழியர் தரப்பு Telecom Technician கேடருக்கு ஆளெடுப்பு செய்திட கோரியிருந்தோம் என்றும். கேடர் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை வெளியாட்கள் யாரும் இக்கேடருக்கென நியமிக்கப்படவில்லை என்றும்.

நம்மைப் போன்ற பொதுத்துறைக்குத் தேவையான குறைந்த பட்சம் பட்டய தகுதியோடும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றவும்  நிறைய இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள்  பணியமர்த்தப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது நம் நிறுவனத்தின் ஊழியர்களாக நீடிப்பார்கள் என்றும் இதனால் நமது சேவைக்கும், நிறுவனத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும்.

இத்தகைய சூழ்நிலையில்  இக்கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய சங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.