14 August 2018


1: 1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒருடாலருக்கு சமமாக இருந்தது.

3: இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

1100: இந்தியாவில் சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.

17: இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.

88.62: இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.

562: இந்தியா சுதந்திரம் பெற்ற போது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார்.

2: மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

சுதந்திரத்தின்
 பெருமைதனை உணர்வோம் ...
சுதந்திரப் போராளிகளை 
எந்நாளும் போற்றுவோம்...

அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின
 நல்வாழ்த்துகள்