JE(TTA) இலாக்காத்தேர்வு மறுபரிசீலனை
முடிவுகள்
JE(TTA) கேடருக்கான இலாக்காத்தேர்வு 28/01/2018
அன்று நடைபெற்றது. தேர்வு மிக கடினமாக இருந்ததோடு
மட்டுமின்றி , தவறான் கேள்விகள் இருந்ததாலும் நாடு முழுவதும் நூற்றுக்கும் குறைவான
தோழர்களே வெற்றி பெற்றனர்.
ஆகவே தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும்
, மதிப்பெண்களில் தளர்வளித்து புதிய முடிவுகளை
வெளியிடவும் நமது சங்கம் தொடர்ந்து
நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.
அதனடிப்படையில்
மதிப்பெண் தளர்வு செய்யப்பட்டு தேர்வு
முடிவுகள் நேற்று 03/10/2018 வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில்
22 தோழர்களும், அகில இந்திய அளவில்
250 தோழர்களும் ஒருகட்ட விலக்கு அடிப்படையில்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு விருதுநகர் மாவட்டச்சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
முயற்சி
எடுத்த மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துகள்