புறவாசல் வழியாக கைப்பற்றப்படும் BSNL டவர் வர்த்தகம்...
கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தமிழகம், உத்திரப்பிரதேசம்
(கிழக்கு) மற்றும் (மேற்கு), உத்தர்கான்ட் மாநிலங்களில் உள்ள 6945 BSNL Tower களையும் நிர்வகித்து பராமரிக்கும்
பொறுப்பை ITI நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கி
BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. இதற்காக BSNL Rs
6633.56 கோடி ரூபாயை ...ITI க்கு வழங்கியது.
உடனடியாக அனைத்துச் சங்கம்
சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு நமது நிறுவனத்தின் CMD இந்த
நடவடிக்கை மூலம் 1000 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிவித்தார். இருப்பினும் நமது
தலைவர்கள் இந்நடவடிக்கை நமது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என தங்களது
கருத்தை பதிவு செய்தனர்.
தற்போது நமது கடும் ஆட்சேபங்களையும்
மீறி இந்தியா முழுவதும் நமது நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பராமரிக்க இந்தியா
முழுவது 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ITI
உட்பட மேலும் மூன்று தனியார்
நிறுவனங்களுக்கு குத்தகை விடப்பட்டுள்ளன.
அதன்படி.
M/s Mahendra
Mahendra நிறுவனத்திற்கு
6329 டவர்களும்...
M/s AST Telecom Solar Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு 4808 டவர்களும்...
M/s Pace Power SystemPvt Ltd என்ற
நிறுவனத்திற்கு 10405 டவர்களும்...
குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அந்தந்த மாநில CGMகள் உடனடியாக உடன்படிக்கையில்
கையெழுத்து இட்டு டவர்களை தனியார்
வசம் As is Where is Basis அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும்.
Tower Corporationஐ எதிர்த்து நாம் போராடி வரும்
நிலையில் ஒட்டுமொத்த டவர்களையும் குத்தகைக்கு விடுவதின் மூலம மறைமுகமாக தனது
நோக்கத்தை BJP அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது.
அரசின்
இம்முடிவை விருதுநகர் மாவட்டச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.